கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வாகரையில் இல்மனையிற் அகழ்வுக்கு எதிராகப் போராட்டம்

தமது பிரதேசம் அழிந்துவிடுமென மக்கள் கவலை
பதிப்பு: 2019 ஜூன் 12 23:16
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 13 10:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasternProvince
#Batticaloa
#Vaharai
#TNPF
#TNA
#Maithripalasrisena
#Ranilwickramasinghe
#Srilanka
#lka
தமிழர் தாயகம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நாற்பத்து எட்டுக் கிலோமீற்றர் நீளமான கடற்கரையில் இல்மனைற் சட்டவிரோதமாக அகழ்வதற்கு கொழும்பு நிர்வாகம் அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. மேலும் நூறு மீற்றர் ஆழத்திற்கு இல்மனைற் அகழப்படவுள்ளதாகவும் இதனால் வாகரைப் பிரதேசம் முற்றுமுழுதாக அழிவடையும் நிலை ஏற்படுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றியுள்ளனர். இல்மனைற் அகழ்வதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசமெழுப்பினர்.
 
இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் இதனால் ரணில் - மைத்திரி அரசாங்கம் வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை விற்பனை செய்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

இல்மனைற் அகழ்வுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதமும் வாகரை மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அகழ்வைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உறுதியளித்திருந்தனர்.

ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள பல்தேசியக் கம்பனிகளுக்கு காணிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.