அந்த அறிக்கையின் பிரதி நாடாளுமன்றத்துக்கு கிடைத்ததா என்று நிமல் லான்சா கேள்வி தொடுத்தார். தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் சென்றுவிட்ட நிலையில், இதுவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஏன் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் அவர் கேட்டார்.
அத்துடன் இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதற்காக புதிய சட்டங்கள் ஏதுவும் உருவாக்கப்பட்டுள்ளதா எனவும் அவர் பிரதி சபாநாயகரிடம் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர்,ஆனந்த குமாரசிறி, அறிக்கையின் பிரதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென ஒரே வார்த்தையில் கூறினார்.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த விசாரணைகளை நிறுத்துமாறு மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டிருந்தார். ஆனால் விசாரணையை நிறுத்த முடியாதென ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடைவடைந்த பின்னரே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பிரதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.