இது தொடர்பாக சிங்கள ஊடகங்களில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் வருகின்றன. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழித்து அனைத்து மக்களையும் ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே, இந்த மாநாட்டின் பிரதான இலக்கு என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் ஆடை, ஹலால், மத்ரஷ்ரா, காதிக்கோர்ட் சட்டம், தௌஹீத் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக பிரகடனம் செய்து, அவற்றை இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கையளிப்பதென பொதுபல சேன கூறியுள்ளது.
இந்த மாநாடு முஸ்லிம் மக்களுக்கு எதிரான மாநாடென்றும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த மாநாடு நடைபெற்றால் அன்றைய தினம் கண்டியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பௌத்த பிக்குகளின் இந்த மாநாட்டை தடுத்து நிறுத்த எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவேயில்லையென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.