அதேவேளை, பதுளை, மாத்தளை, நுவரெலியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தொடரும் வறட்சியின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் நிலவுவதாக இலங்கை அனர்த்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கடும் வறட்சியினால் கால்நடைகள் உயிரிழப்பதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி கிராமத்தில் மானா குளம் புனரமைப்பு இல்லாமல் குளத்தில் நீர் வற்றியுள்ளது.
இதனால் கால்நடைகள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் உயிரிழப்பதாக பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். கால் நடைகளை நம்பி வாழும் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிகளவு நீர் தேங்கி நிற்கக் கூடிய முறையில் மானா குளத்தைப் புனரமைப்பு செய்து தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலையினால் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பதினேழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.