மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமென கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக மகிந்த தரப்பு நாளை செவ்வாய்க்கிழமை ஒன்று கூடி ஆராயவுள்ளது.
இதேவேளை, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பரென ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்குமென கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்று கூடி ஆராயவுள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையாதென அமைச்சர் லக்ஸ்மன் கிரியயெல்ல கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும். முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் கட்சிகளும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.