ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் சம்மதத்தோடு மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியிருந்தது.
ரிசாட் பதியுதீனும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பாரென்றும் காங்கிரஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ரிசாட் பதியுதீனுக்கு அமைச்சுப் பதவியை வழங்கக் கூடாதென ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, ரிசாட் பதியுதீன் மீது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லையென்று இலங்கைப் பொலிஸ் திணைக்களம் கூறியிருந்தது.
கொழும்பு நீதிமன்றத்திலும் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் ரிசாட் பதியுதீனுக்குத் தொடர்புகள் இல்லையென இலங்கை காவல் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.