இதனால் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விவாதம் நடத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது ஒரு தேர்தல் நாடகம் என்று குற்றம் சுமத்தியுள்ள, ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கடந்த ஜனவரி மாதத்துடன் கைவிடப்பட்டிருந்த புதிய அரசியல் யாப்புக்கான பேச்சுக்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒத்திவைப்பு வேளை பிரரேரணை ஒன்றை முன்வைத்து விவாதத்தை நடத்த சபாநாயகர் கரு ஜயசூரியவும் அனுமதி வழங்கியுள்ளார். இலங்கை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென பிரேரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த விடயங்கள் எதுவுமே இல்லையென ஏனைய தமிழ்த் தரப்புகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இலங்கை அரசின் ஒற்றையாட்சித் தன்மையை மீ்ண்டும் நிறுவியுள்ளதாகவும் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை கொடுத்து.,இலங்கைத் தீவை பௌத்த நாடாகக் காண்பிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் புதிய அரசியல் யாப்புத் திருத்தங்கள் தொடர்பாகப் பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் நாடகம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவதானிகளும் கூறியுள்ளனர்.