மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழுத்தமாகக் கூறினர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களைக் கைகளில் ஏந்தியவாறு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அமைப்புகள், உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல பொது அமைப்புகளிடம் கடந்த பல வருடங்களாக முறையிட்டும் உரிய பதில் இல்லையென்றும் உறவினர்கள் வேதனைப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தினரின் முகாம்கள் இரகசிய முகாம்கள் போன்றவற்றை சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பார்வையிட வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தமது பிள்ளை உயிருடன் இருக்கிறாரெனத் தான் நம்புவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவர் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை நினைத்து பல தாய்மார் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை நினைத்து தொடர்ச்சியான கவலையோடும் வேதனையோடும் போராட்டம் நடத்துவதாகவும் ஆனால் இலங்கை அரசாங்கம் தங்களைப் புறக்கணிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர்.
தமிழ் அரசியல் பிரநிதிகள் மீதும் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். தேர்தலை மாத்திரம் இலக்காக் கொண்டு தமிழ்க் கட்சிகள் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.