இதன்போது பிரதானமாக, வீட்டில் உள்ள குடும்ப அங்கத்தவர்கள் அனைவரதும் தேசிய அடையாள அட்டையில் காணப்படும் அனைத்து விபரங்களும் பொலிஸாரால் பதிவுசெய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்குப் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்களின் ஊடாக பொது மக்களது விபரங்கள் திரட்டப்பட்டன.
இருந்தபோதிலும், பொலிஸாரின் தேவைக்காகவே இவ்வாறு குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான பதிவு மேற்கொள்ளப்படுவதாக, பதிவு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் தம்மிடம் குறிப்பிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இது போன்ற பல நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமூகங்களை எல்லையாகக் கொண்ட தமிழ்க் கிராமங்களிலும் இத்தகைய பதிவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதனால், தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை தொடர்வதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.