இந்த நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்து வருகிறார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் இன்று செவ்வாய்க்கிழமை சட்ட வியாக்கியானம் கோரியுள்ளார்.
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாகாண சபைகளுக்குரிய தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பாகவே மைத்திரிபால சிறிசேன விளக்கம் கேட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விண்ணப்பம் ஒன்றை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த விண்ணப்பம் குறித்து உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
தேர்தலை நடத்த முடியுமா என்ற சட்ட வியாக்கியானம் தொடர்பான விளக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நிதிமன்ற நீதியரசர்களினால் அனுப்பிவைக்கப்படுமென நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.