அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் அரசியல் கைதிகளிடம் கூறியுள்ளர்.
விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 14 ஆம் திகதி கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் 63 வயதான கனகசபை தேவதாசன் என்ற தமிழ் அரசியல் கைதி உண்ணாவிரம் இருந்தபோது அமைச்சர் மனோ கணேசன் சென்று பார்வையிட்டிருந்தார்.
இரண்டு வாரங்களில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்விப்பதாக அமைச்சர் மனோ கணேசன் அப்போது உறுதியளித்திருந்தார்.
ஆனால் இதுவரையும் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதற்கான தாமதங்கள் குறித்து வேலுக்குமார் மூலமாக அமைச்சர் மனோ கணேசன் தகவல் அனுப்பியதாக அரசியல் கைதியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
கொழும்பு மகசீன், வெலிக்கடை, அனுராதபுரம் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் நூற்று இருபது தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.