இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தலிலேயே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போதைக்கு யாரும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்தாலும் அவருக்கு அதிகாரங்களே இல்லையென்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளாா்.
பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் மாத்திரமே அதிகாரங்கள் உள்ளன. ஆகவே நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியமான தேர்தலாக அமையப் போகின்றது என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் முக்கியமற்றது. அதற்காகப் போட்டியிட்டு கருத்து வேறுபாடுகளை உருவாக்க வேண்டாமெனவும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களிடம் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குமா அல்லது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்குமா என்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும்மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தல் முக்கியமற்றது என்று சந்திரிக்காவும் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர் என்ற முறையிலும் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் பண்டாரநாயக்காவின் மகள் என்ற அடிப்படையிலும் சந்திரிக்காவுக்கு இந்தச் சந்திப்பில் கௌரம் வழங்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன கௌரவித்து உரையாற்றினார்.