ஆனாலும் இப்பகுதிகளில் முன்பு வாழ்ந்த மக்களில் தற்பொழுது உயிரோடுள்ளவர்களை 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுமாறு இலங்கை;ச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பிரகாரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் இடப்பெயர்வு காரணமாக இதுவரை வாக்காளர்களாக பதிவு செய்யப்படாதவர்களை 2019ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மத்தி, மேற்கு, தெற்கு, தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு மற்றும் தெற்கு, குறும்பச்சிட்டி, கட்டுவான், தென்மயிலை, பாலாலி தெற்கு, வசாவிளான் மேற்கு, பாலாலி கிழக்கு மற்றும் வடமேற்கு, ஆகிய கிராமங்களிலும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஆனையிறவு, இத்தாவில், முகமாலை, வேம்போடுகேனி உட்பட மன்னார் தேர்தல் தொகுதியில் முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களிலேயே வாக்காளர்களாக புதியவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
இந்த மூன்று நிர்வாக மாவட்டங்களிலும் 26 கிராமங்களில் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதி கிராமசேவையாளர்கள் ஊடாக உதவி தேர்தல் ஆணையாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.