ஆகவே வரட்சியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் இந்த மீனவர்களுக்கு உதவியளிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்துப் பதிவு செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை, தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக இரணைமடுக் குளத்தில் காணப்படும் முதலைகள் வெளியே வருவதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
வெளியிடங்களில் காணப்படும் முதலைகளைப் பிடித்து வந்து சில தீய சக்திகள் இரணைமடுக்குளத்திற்குள் விடுவதாகவும் இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தெரிவிக்கின்றனர்.
வெளியில் இருந்து கொண்டுவரப்படும் முதலைகள் இரணைமடுக்குளத்திற்குள் விடப்படுகின்றமை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.