இதனால் குடும்பிமலை, மியான்குளம், தரவை, சின்ன மியாங்குளம், பேரில்லாவெளி, குழாவடி, போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 15 கிலோமீற்றர் தூரம் சென்று கிரானில் தமது கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பின்னர் விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள 232 ஆவது ஆட்லறி படைப் பிரிவின் உயிர் அதிகாரியின் விடுதியாக நீர்ப்பாசன அலுவலக கட்டடம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அலுவலகக் கட்டடத்தை இராணுவத்திடம் இருந்து மீட்டெடுத்து விவசாயிகளுக்கான சேவையை தங்கள் பகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புக்கள் நீர்ப்பானச திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, தரவை, அல்லி ஓடைச் சந்தி ஆகிய பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தின் உறவினர்கள் மற்றும் சிங்கள மக்கள் இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயனிகளாக வருகைதரும் போது இந்த அலுவலகக் கட்டடங்கள் தங்குமிடத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.