கட்சி அரசியல் வேறுபாடுகள் எதுவுமேயின்றி பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். நினைவுத் தூபியில் தீபங்களும் ஏற்றப்பட்டன.இலங்கை இராணுவத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் விசேட தேவையுடைய ஐந்து பிள்ளைகள், பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட 42 சிறுவர்கள், 85 பெண்கள், 28 வயோதிபர்கள் உட்பட நூற்றி 86 பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தக் கொலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு 2016 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இலங்கை இராணுவத்தினர் இந்தப் படுகொலையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தமை குறித்து கிராம மக்கள் பலர் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.
இந்தப் படுகொலைகளுக்கு அன்று சத்துருக்கொண்டான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாகப் பதவி வகித்திருந்த கப்ரன் காமினி வர்ணகுலசூரிய, இராணுவ அதிகாரிகளான கெரத், விஜயநாயக்க மற்றும் கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் பிரதான எதிரிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நூற்றி 86 தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொது மக்கள் மலா் தூவி வணக்க நிகழ்வுகளில் பங்குகொண்டதாக ஏற்பாட்டாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.