வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துரையாடல்களுக்குத் தலைமை தாங்கினார். பொதுமக்களுக்குச் சொந்தமான பல காணிகள் இலங்கைப் படையினர் வசமுள்ளது. அந்தக் காணிகளுக்குள் இருக்கின்ற வளங்கள் அனைத்தையும் இராணுவத்தினரே பெற்றுக் கொள்வதாகவும் கலந்துரையாடலில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் காணிகள் பற்றிய விபரங்கள் இன்றைய கலந்துரையாடலில் அடையாளமிடப்பட்டுள்ளன. இந்தக் கணிகளை உடனடியாகக் கையளிக்க வேண்டுமெனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொழில்துறையின்றி காணப்படுவதாகவும் கலந்துரையாடலில் பங்குகொண்ட அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.
படையினரின் கட்டுப்பாட்டில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதால் பல குடும்பங்கள் மீளக்குடியேற முடியாதுள்ளதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் காணிகளை பொதுமக்களிடம் மீளவும் கையளிக்க வேண்டிய அவசியம் குறித்து ஆளுநர் சுரேன் ராகவன் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் படை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.
கலந்துரையாடல் சுமுகமாக இடம்பெற்றதாகவும் அடையாளமிடப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் ஆளுநர் சுரேன் ராகவன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.