இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் கலந்துகொண்டு அமைதியான முறையில் தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
ஈழ தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தையும் சைவ சமயத்தையும் அவமதிக்கும் முறையில் பௌத்த பிக்குமார் செயற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையில் ஏற்கனவே நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் பௌத்த பிக்குமார் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை உதாசீனம் செய்தமையினால் இலங்கை நீதித்துறைச் செயற்பாடுகளில் மேலும் நம்பிக்கையற்ற தன்மை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
திருகோணமலை கன்னியாவிலும், முல்லைதீவிலும் நடைபெற்ற நீதிக்கு மாறான சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தையும் சைவ சமயத்தையும் தொடர்ச்சியாக அவமதித்து வருகின்ற செயற்பாடுகளாகவே தாம் கருதுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய இந்துக்குருமார் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.