சுற்றிவளைத்துத் தேடுதல் இடம்பெற்றபோது அது பற்றிய செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இரகசியத் தகவல் அடிப்படையில் தேடுதல். சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.ஆனால் ஆயுதங்களோ. தடையப் பொருட்களோ எதுவுமே கைப்பற்றப்படவில்லை என்று அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஐம்பது இராணுவத்தினர் மாலை நான்கு மணி முதல் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடி மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பிரதேசங்களில் சுமார் மூன்று மணி நேரத்தி;ற்கும் அதிகமாக போக்குவரத்துத் தடை செய்யப்பட்டிருந்தது. அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கவுள்ளதாக அறிவித்த நிலையில் இந்தத் தேடுதல். சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.