கொலை அச்சுறுத்தலை எதிர்கொள்வதானது வெள்ளை வாகனக் கலாசாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும், அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் உருவாகுவதை தாம் விரும்பவில்லை எனவும் பேராசிரியர் சந்திரகுப்த ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான பிரச்சினை தொடர்பாக இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூல முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அந்த முறைப்பாடு விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மாதம் இரண்டாம், மூன்றாம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு நான்காம் திகதி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.
கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட முறை சட்டத்திற்கு அமைவானதென்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இந்த நிலையிலேயே மனுவைத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.