பிரதேச மக்களும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 1987 ஆம் ஆண்டு இந்திப் படையினரோடு போர் ஆரம்பிக்கப்பட்டு ஓக்டோபர் மாதம் பதினொராம் பன்னிரெண்டாம் திகதிகளில்; கொக்குவில் பிரம்படியில் முதன் முதலாக ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் மிக மோசமாகக் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழ் இனப் படுகொலைச் சம்பவமாக கொக்குவில் பிரம்படிப் படுகொலை பதிவாகியிருந்தது. பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறப்பு நினைவு தூபியும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நினைவுத் தூபியின் முன் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர் யாழ்.மாநகர உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்தும் தீபங்கள் ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.