இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் எழுபதாயிரம் பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுவார்கள் என்று இலங்கைப் பாதுகாப்புச் செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டளைப்படியே பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் செயற்படுவார்கள் என்றும் அரசியல் தலையீடுகள் இருக்காதென்றும் பாதுகாப்புச் செயலகம் கூறியுள்ளது. ஆனால் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்படுவதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி கூறியுள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் ஆயிரத்து 835 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் கண்காணிப்புப் பணியில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பிரதான அரசியல் கட்சிகளின் வேண்டுகோள்களுக்கு அமைவாக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனவும் அதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.