இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச புதிய கூட்டணியில்- ஒப்பந்தம் கைச்சாத்தாகும்

இருவரும் இணைந்து கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வர்
பதிப்பு: 2019 ஒக். 28 23:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 28 23:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியுடன் ஏனைய சிறிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜனக் கூட்டணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கூட்டணியின் இணைத் தலைவர்களாக மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகள் இணைந்து கூட்டணியை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 31 ஆம் திகதி கைச்சாத்திடப்படுமெனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

புதிய கூட்டணியின் தலைவராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார். கூட்டணியின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர்களாலும், தேசிய அமைப்பாளர் மற்றும் உதவி செயலாளர் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களாலும் நிரப்பப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் இணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.