ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகள் இணைந்து கூட்டணியை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 31 ஆம் திகதி கைச்சாத்திடப்படுமெனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.
புதிய கூட்டணியின் தலைவராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார். கூட்டணியின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர்களாலும், தேசிய அமைப்பாளர் மற்றும் உதவி செயலாளர் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களாலும் நிரப்பப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் இணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.