யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், றோ அமைப்பிற்குத் தமது விசாரணைகளை மேற்கொள்ள இலகுவாக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலிருந்து குழு ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்திருப்பதாக வடமாகாண வட்டாரங்களை மேற்கோள் காண்பித்து அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களும் இந்தியா தொடர்பாக என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்வதே இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவின் முக்கிய நோக்கம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது்.
றோ அமைப்பிற்கு நேரடித் தொடர்பு காணப்படுகின்ற வடபகுதியிலுள்ள இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்தக் குழு சந்தித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்பு பெரிதும் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கா இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் றோ குழுவினர் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்கள் ஆற்றுகின்ற உரைகளை வீடியோப் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தோ்தலில் இரு பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் விடயத்தில் அமெரிக்க, இந்திய அரசுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக ஏலவே செய்திகள், செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.