சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதி. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய முடிவு செய்துள்ளதாக சந்திரிகா கூறினார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறிய சந்திரிகா, நேற்று இடம்பெற்ற மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் பலர் சமூகமளிக்கவிருந்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச தடுத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தினார்.
அமைச்சர்களான ராஜித சேனரட்ன, அர்சுனா ரணதுங்க ஆகியோர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோருக்கு ஈடாக ஈழத் தமிழ் மக்களின் முதல் மூன்று கட்டப் போரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது தானே என்றும் சந்திரிகா கூறினார்.
இலங்கையின் இறைமை தன்னாதிக்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு புதிய ஜனாதிபதிக்கு உண்டு. அதேவேளை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் சந்திரிக்கா கூறினார்.