ஆனாலும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று மகிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் வருகை தந்த தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸார், போராட்டத்தை நிறுத்துமாறு வற்புறுத்தினர். இதனால் பொலிஸாருடன் தம்பிராசா தர்க்கப்பட்டார்.
கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரங்களை தமிழ் மொழியில் வழங்குமாறு கோரினார். அப்படியில்லையேல் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் தம்பிராசா பொலிஸாரிடம் கூறினார்.
ஆனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்தமையினால் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடியாதென்று பொலிஸார் அறிவுறுத்தினர். ஆனால் அதனைத் தம்பிராசா ஏற்கவில்லை. இதனால் நீண்டநேர வாக்குவாதத்தின் பின்னர் பொலிஸார் தம்பிராசாவை பலாத்காரமாகத் தூக்கிச் சென்றுள்ளனர்.
தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.