குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவுக்கும் மற்றும் தீவுப் பகுதிகளுக்கும் சென்றுள்ளதாக கொழும்பில் உள்ள கண்காணிப்பு அலுவலக அதிகாரியொருவர் கூறினார்.
வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் பயணம் செய்துள்ளனர். ஏற்கனவே அங்கு சென்றுள்ள உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ள இடங்களை நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் பார்வையிட்டுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸார் மாத்திரமே காவல் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் பிரதான வீதிகளில் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்தக் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பர். 21 ஆம் திகதி தேர்தல் கண்காணிப்புகள் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் இவர்கள் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.