மாணவர்கள் நினைவுத் தூபியைப் படம் எடுப்பதாக முல்லைத்தீவுப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்து புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் அங்கு சென்று மாணவர்களை அவதானித்ததாகவும் கூறப்படுகின்றது.
மாணவர்களைப் பின்தொடர்ந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார், மாணவர்கள் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிப்பதை அறிந்து கொண்டனர். இதனால் புதுக்குடியிருப்பு தேக்கம்மர காட்டுப்பகுதியில் வைத்து வழிமறித்து நீண்ட நேரம் விசாரணை செய்தனர்.
நீண்ட நேர விசாரணையின் பின்னர் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி முடித்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் பின்தொடர்ந்து அவதானிப்பதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முள்ளிவாய்;க்கால் பிரதேசத்திற்குச் செல்வதும் அங்குள்ள நினைவுத் தூபியைப் படம் எடுப்பதும் அன்றாட நிகழ்வாகும். ஆகவே படம் எடுத்ததாகக் கூறி மாணவர்கள் விசாரணை செய்யப்பட்டமை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமைக்கான எச்சரிக்கை என்றே யாழ் பல்கலைக்கழகக் கல்விச் சமூகம் கருதுகின்றது.