சிங்கள பொது அமைப்பு ஒன்று முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவர் மீது விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.
ஆனால் விசாரணை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கூறவில்லை. theleader.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று தொடர்பாக துஷாரா விதாரனயிடம் எழுத்துமூல அறிக்கை ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட கம்பரெலிய நிதியுதவித் திட்டம் தொடர்பாக துஷாரா விதாரன ஊக்கப்படுத்தி எழுதியிருந்தார்.
இந்த விசாரணை தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் ஊடக ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துஷாரா விதாரன எழுதிய கட்டுரை தொடர்பாக மூல அறிக்கை பெறப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.