தற்போது அந்த நடவடிக்கைகள் நேரடியாகவே இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டுவதற்கான முயற்சிகள் இரவு பகலாக இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலி.வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு அங்கு புத்த விகாரை அமைக்க இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. வலி வடக்குப் பிரதேச சபை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுவரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லையென சஜீவன் கூறுகிறார். ஆகவே பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜீவன் கேட்டுள்ளார்.