தூதரக அதிகாரியைக் கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கும் சுவிஸ்லாந்துத் தூதரக அதிகாரிகள் முற்பட்டதாகவும் ஆனாலும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளதென்றும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்ற நவம்பர் 25 ஆம் திகதி சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பொய்யானது எனவும் கடத்தப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லையென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரியிடம் இருந்தும் சுவிஸ்லாந்துத் துதுவரிடம் இருந்தும் இதுவரை அதிகாரபூர்வமான முறைப்பாடுகள் எதுவும் இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை.
சுவிஸ்லாந்துத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய மிகவும் குறைந்தளவு முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் எவரும் கடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லையென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.