அத்துடன் கடத்தப்பட்ட தூதரகப் பணியாளரும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்க மறுத்திருந்தார். இதனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென இலங்கை அரசாங்கம் சுவிஸ்லாந்துத் தூதரகத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தது.
ஆனால் வாக்குமூலம் வழங்கும் மன நிலையில் குறித்த பணியாளர் இல்லையென்று சுவிஸ்லாந்துத் தூதரகம் கூறியிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பணியாளரை சுவிஸ்லாந்துக்கு அழைத்துச் செல்ல சுவிஸ் தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தது. மருத்துவ விமானமும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது.
கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட தூதரகப் பெண் பணியாளர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்காமல் சுவிஸ்லாந்துக்குச் செல்ல முடியாதென்றும் அரசாங்கம் கூறியிருந்தது.
அத்துடன் நாளை ஒன்பதாம் திகதி வரை குறித்த தூதரகப் பெண் வெளிநாடு செல்ல முடியாதென்று கொழும்பு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அத்துடன் குறித்த பெண் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று குறித்த பெண் பணியாளர் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நாளை திங்கட்கிழமை அல்லது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட பணியாளர் சுவிஸ்லாந்துக்குச் செல்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.