இலங்கையின் புதிய அரசாங்கம்

ஜெனீவாத் தீர்மானத்தை ரத்துச் செய்ய ஆலோனை- அமைச்சர் தினேஸ்

மார்ச் மாத அமர்வில் இலங்கை உயர் அதிகாரிகள் எடுத்துக் கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
பதிப்பு: 2019 டிச. 20 16:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 23 01:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை ரத்துச் செய்வது தொடர்பாக புதிய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்க முடியாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் அந்தத் தீர்மானத்தை ரத்துச் செய்வது குறித்து ஆலோசிப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பேசுவார்கள் என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மீளாய்வு செய்கின்றனர். அதன் பின்னர் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக முடிவு ஒன்றை எடுக்கவுள்ளது.

ஜெனீவா அமர்வின்போது 30/1 தீர்மானத்தை ஏற்க முடியாதென்பதை இலங்கை அதிகாரிகள் முன்வைப்பார்கள் என்றும் இறைமையுள்ள நாடொன்றின் மீது எதனையும் திணிக்க முடியாதென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை ரத்துச் செய்யவுள்ளதாகக் கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.