இந்திய இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, புலனாய்வு குறித்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சென்றிருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அங்கு இலங்கைக் கடற்படை அதிகாரிகளோடு கலந்துரையாடினார். அத்துடன் கிழக்கு மாகாணக் கடற்பாதுகாப்பு விடங்கள் குறித்தும் அவர் அறிந்துகொண்டார்.
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருந்த போது, பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
வடக்குக்- கிழக்கு கடற்பகுதி அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டே இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இலங்கைக்குப் பயணம் செய்ததாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இலங்கைக்குப் பயணம் செய்தமை தொடர்பாக கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில ஊடகங்கள் முக்கியத்தும் கொடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்புக்களையும் வெளியிடவில்லை.