இலங்கையின் இறைமைக்குச் சவால் ஏற்படக் கூடிய முறையில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கைச் சுயாதீன நீதித்துறை ஆகியவை மீது ஜெனீவா குற்றங்களை முன்வைக்க முடியாதென்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் சர்வதேசத்தில் உள்ள பொது அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள் இலங்கை மீது காட்டமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. இலங்கை தொடர்பான சர்வதேச அமைப்புகளின் நிலைப்பாடுகள் கடுமையானதாக உள்ளன. இதனால் இலங்கைக்கு ஆதரவாகவுள்ள நாடுகளுடன் இணைந்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை செயற்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மனித உரிமைச் சபையில் சவால்களை எதிர்கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன, அமைச்சின் உயர் அதிகாரிகள் கூட்டாகச் செயற்பட்டு வருகின்றன. இலங்கை உயர்மட்டக்குழு ஒன்று ஜெனீவாவுக்கும் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.