இதனால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தன. இராணுவத் தளபதிப் பதவியில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட வேண்டுமெனவும் அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில் இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன குறித்த பதவியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை விலகியதை அடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னவை நியமித்திருந்தார். இவருக்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சேவை நீடிப்பு 2019 ஓகஸ்ட் 22ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது.
ஆனாலும் மைத்திரிபால சிறிசேன, இந்த ஆண்டு டிசெம்பர் 31 வரை சேவை நீடிப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று அவருடைய பதவிக்காலம் முடிவடைந்து அவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதனால் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2015 முதல் 2017 வரை இலங்கை கடற்படைத் தளபதியாகவும் பணியாற்றியிருந்தார்.