ஆனால் தேர்தலுக்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச முற்படுவதாகவும் ஆனாலும் அமைச்சர்கள் பலரும் அதற்கு உட்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் ஏப்பிரல் மாத இறுதியில் புதிய நாடாளுமன்றத்தை அமைத்து வரவு செலவத் திட்டத்தை உடனடியாகச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமான உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
எனினும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது நாடாளுமன்றச் சம்பிரதாயங்கள் என்று மகிந்த ராஜபக்ச கட்சியின் மூத்த அமைச்சர்களிடம் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை. மாவட்டச் செயலகங்கள் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உரிய குறைந்த பட்;ச நிதி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.