2009 ஆம் ஆண்டு மே மாதத்தி;ற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் புத்தர் சிலை வைப்பது, பௌத்த விகாரைகள் கட்டுவது போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்த்தில் பௌத்த விகாரை அவசர அவசரமாக அமைப்பதற்குரிய வசதிகளையும் உதவிகளையும் பௌத்த அமைப்புகள் செய்திருந்தன. அதேவேளை, சைவ ஆலயங்கள், இஸ்லாமியப் பள்ளிவாசல், கிறிஸ்த்தவ ஆலயங்கள் அமைக்கும் பணிகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. பிள்ளையார் ஆலயம் ஒன்று சிறிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் முழுமையான கட்டுமாணப்பணிகள் உரியவர்களினால் ஆரம்பிக்கப்படவில்லை. நிர்வாகமட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உரியவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் பௌத்த விகாரை துரிதமாகக் கட்டப்பட்டு இன்று கலசம் வைக்கும் நிகழ்வும் நடைபெற்று முடிவடைந்ததுள்ளன.