அன்றைய தினம் வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தைப் பகிஸ்கரித்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கிலும், கிழக்கிலும் எதிர்ப்புப் போராட்டம் சமநேரத்தில் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகள், கணவன்மார் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்றும் இந்த நிலையில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துள்ளதாக அவரால் எப்படிக் கூற முடியும் எனவும் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி கேள்வி எழுப்பினார்.