பின்னர் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வரவேற்பு அளித்து விருந்துபசாரம் வழங்கவுள்ளார். இந்த விரு்ந்துபசாரத்தில் இந்தியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்வர் எனக் கூறப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டாம் வாரம் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்சவும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இலங்கைக்கு 450கோடி டொலர் வழங்கப்படுமென புதுடில்லியில் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. நரேந்திரமோடியுடனான சந்திப்பில் இலங்கைக் கடல்சார் பாதுகாப்பு, இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்தியாவுக்குச் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இந்திய- இலங்கை உறவுகள் குறித்தும் பொருளாதாரரீதியாகவும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இந்தியாவின் ஆலோசனையோடு இலங்கை செயற்பட வேண்டுமென்ற அழுத்தங்களும் அதற்குரிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது குறித்தும் பேசப்படலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்ப்பார்க்கின்றன.