இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் நிவாரணம் கூட அவசியம் இல்லையென்றும் அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
மரணச் சான்றிதழ் வழங்கவுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அருட்தந்தை சக்திசேவல் கூறினார்.
மரணச் சான்றிதழ் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கூறிய கருத்துக்கு வடக்குக் கிழக்கில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கமும் வன்மையாகக் கண்டனம் வெளியிட்டிருந்தது.
மரணச் சான்றிதழை ஏற்க முடியாதென்றும் நிவாரணங்கள் கூடத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.