எனினும் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்து அதற்கு சஜித் பிரேமதாச தலைவராகச் செயற்பட வேண்டும் என்றும் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் ஆசுமாரசிங்க. யானைச் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடுவது என்றும் விரும்பியவர்கள் இணையலாம் என்றும் உடன்படாதவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியே போக முடியும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி நன்கு பயன்படுத்துவதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரிடையே மேலும் கருத்து மோதல்களை உருவாக்கிவிடுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.