போரின் பின்னரான சூழலில் அரசியல், பொரளாதார ரீதியாக மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அவற்றை உரிய முறையில் செயற்படுத்தும் நோக்கில் வன்னிப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட இந்த ஒன்றியம் அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் மக்களிற்கு தேவையானயான அபிவிருத்தி மற்றும் அரசியற் பணிகள் கிராம மற்றும் மாவட்ட மட்டங்களிலிருந்து முன்னெடுக்க, இளையோர் சமூகத்தை ஒன்றிதணக்கும் முயற்சியின் முதற்படியே இந்த ஒன்றியம் எனவும் அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் பாரதிபுரம் மலையாளபுரம் ஸ்தாபகர் அமரர். மாணிக்கம் கணபதியின் நற் பணிகளை மையமாக் கொண்டு இந்த ஒன்றியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அரசியல் நோக்கம் அல்ல எனவும் இதன் அங்கத்தவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பின்னால் திரிந்து அலைவதை விட இந்த ஒன்றியத்தின் செயற்பாடுகள் மூலம் சாதாரண பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதே இதன் பிரதேன நோக்கம் எனவும் இதன் அங்கத்தவர்கன் தெரிவித்தனர்.