இவ்வாறானதொரு நிலையில் குறைநிரப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய 367 பில்லியன் ரூபாய்களுக்காகவே இந்தக் குறை நிரப்புப் பிரேரணையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறுகிறார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏப்பிரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க முடியுமென அரசாங்கம் கூறுகின்றது.