இதனால் கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து வாக்கெடுப்பு நடத்த அரசாங்ம் தீர்மானித்திருந்தது. எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், தேர்தல் முடிவடைந்து உறுதியான அரசாங்கத்தை அமைத்த பின்னர் வரவு செலவுத் திட்டத்தை அல்லது கணக்கு வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
கணக்கு வாக்கெடுப்புக்கான அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக சமர்ப்பிக்கவிருந்த போதிலும் அதனைத் தோற்கடிப்பதென ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவினால் அந்தக் கணக்கு வாக்கறிக்கையை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
இதன் மூலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் முதல் தோல்வியையும் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி முதல் வெற்றியையும் பதிவு செய்து கொண்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மைத்திரி- ரணில் அரசாங்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு , உரக் கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்கமான தற்போதைய எதிர்க்கட்சியினர் பெற்றுக் கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லையென அமைச்சர் தினேஸ் கணவர்த்தன நாடாளுமன்றத்தில் கூறினார்.
பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கையின் தேவைக்காகவே கணக்கு வாக்கு அறிக்கையை சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியால் இதற்கு எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. இ்ந்தக் கணக்கு வாக்கெடுப்பு சட்ட ரீதியானது அல்லவென எதிர்க்கட்சி கூறுகின்றது. ஆனால் சட்டமா அதிபரிடம் கேட்ட போது இது சட்ட ரீதியானது என கூறியதாகவும் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.