ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடைய வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த சஜித் பிரேமதாச தரப்பு உறுப்பினர்கள் அப்படியானால் கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேதாசவிடம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
இதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நடை;பெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு யானைச் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையில் அன்னம் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியும் போட்டியிடுமென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் முஸ்லிம் முஸ்லிம் கட்சிகளைச் சேர்த்துக்கொள்ளாமல் தமக்கு விருப்பமான அல்லது அடங்கிச் செல்லக் கூடிய குறிப்பிட்ட சில தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியை மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் செயற்படுத்துவது போன்று ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செயற்படுத்த முற்படுவதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
கடந்தகாலங்களில் தமிழ் இனவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அந்த இனவாத அரசியல் செயற்பாடுகளுக்கு ஈடாகவும் இன்னுமொரு படி மேலாகவும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பௌத்த தேசியவாதத்தை அடிப்படையாக் கொண்டு செயற்படும் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியில் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படத் தயாராகின்றன.
ஏனெனில் இருப்பதைவிட சஜித் பிரேமதாசவின் புதிய அரசியல் கூட்டணி சிறப்பானதென மலையகத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நம்புகின்றனர்.