ஆனாலும் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க மறுத்துவிட்டதாகவும் இதனால் ஐக்கிய மக்கள் சக்த என்ற புதிய அரசியல் அணியை உருவாக்கித் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதன் யானைச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அன்னம் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் அணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையாது என்றும் க்சியின் பிரதித் தலைவர் ரவிகருணாநாயக்கா இன்று செய்தியளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். ஆகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட மலையகத் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்துள்ளன.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தனிச் சிங்களக் கட்சியாகவே யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் இவ்வாறான செயற்பாடுகள் கோட்டாபய. மகிந்த தரப்புக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசள், ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தியுள்ளார்.