ஜெனீவா மனித உரிமைச் சபையின் 43 ஆவது கூட்டத்தொடரில் சென்ற புதன்கிழமை உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன 30.1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். சர்வதேச நாடுகளின் இணக்கப்பாடு ஒன்றை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக புறம்தள்ளியுள்ளதாகவும் உறவினர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் விசாரணக்காக ஐ.நா.மனித உரிமைகள் சபை பரிந்துரை செய்ய வேண்டுமெனவும் உறவினர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வலியுறுத்தி மாபெரும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாகவும் உறவினர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அனைத்து உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் இந்தப் போராட்டத்திற்கு - மத குருக்கள்,பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள்ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேசக் குற்ற்வியல் நீதிமன்ற விசாரணை நடத்துமாறு கோரி ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு மகஜர் அனுப்புவும் திட்டமிட்டுள்ளதாக உறவினர்கள் சங்கம் கூறியுள்ளது.