வடபகுதியில் உள்ள இலங்கை விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தல் தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் இருந்து வருகை தந்த 210 பேரைத் தனிமைப்படுத்தும் ஏற்பாடுகளில் இலங்கை விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தும் நிலையத்தில் 29 பெண்கள், 12 ஆண்கள் என 21 பேர் கொரோனா வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வடமாகாணம் கிளிநொச்சியில் உள்ள இரணைமடு விமான நிலையம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் இலங்கை விமானப்படையினரால் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். தென்பகுதியில் எந்தவொரு தனமைப்படுத்தல் நிலையங்களும் அமைக்கப்படவில்லை என்றும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் மாத்திரமே இந்த நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.