தேவையான மருந்துப் பொருட்கள் மேலும் அனுப்பப்படும் என்றும் மருத்துவ உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, சுகாதா அமைச்சர் பவித்தரா வன்னியாராட்சி கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவருக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றியதைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இலங்கையின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியிருந்த நிலையில் சென்ற மாத இறுதியில் இலங்கைக்கு சீன அபிவிருத்தி வங்கி ஐநூறு மில்லியன் ரூபாய்களை நீண்டகாலக் கடனாக வழங்கியிருந்தது.
உலக வங்கி 128.6 மில்லியன் அமெரிக்க டெலர்களை உதவியாக வழங்க சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்;கியிருந்தது.